search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கொலை வழக்கு"

    • தனி கோர்ட்டு வாசலில் வைத்து தனிப்படை போலீசார் 3 பேரை கைது செய்தனர்.
    • போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    சுங்குவார்சத்திரம்:

    காஞ்சிபுரம் மாவட்டம் சுங்குவார்சத்திரம் அருகே உள்ள எச்சூர் ஊராட்சி மன்ற தலைவர் குமுதா டோமினிக். இவருடைய மகன் ஆல்பர்ட் (வயது 30). இவர் ஶ்ரீபெரும்புதூர் ஒன்றிய தி.மு.க. இளைஞரணி நிர்வாகியாக இருந்தார். இவர் அங்கு இருக்கக்கூடிய 10-க்கும் மேற்பட்ட தொழிற்சாலைகளின் கழிவுகள் எடுக்கும் பணி செய்து வந்தார். கடந்த 5-ந் தேதி எச்சூர் பகுதியில் உள்ள தனியார் தொழிற்சாலை அருகில் காலி இடத்தில் குடிசையில் ஆல்பர்ட் தனது நண்பர்களுடன் பேசிக் கொண்டிருந்தார். அப்போது மூன்று மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம கும்பல் வெடிகுண்டு வீசி முகம் மற்றும் தலை பகுதிகளில் சரமாரியாக வெட்டி படுகொலை செய்து விட்டு அங்கிருந்து தப்பிச் சென்று விட்டது. இதுகுறித்து சுங்குவார்சத்திரம் போலீசார் கொலை வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்கள் யார்? கூலி படை கும்பலா? அல்லது இவர்களுக்கு தொடர்புடைய நபர்களா? என போலீசார் தனி படை அமைத்து தீவிர விசாரணை மேற்கொண்டனர்.

    இந்த நிலையில் கடந்த 7-ந்தேதி குரோம்பேட்டை பகுதியை சேர்ந்த பிரனவ் (வயது 20), மண்ணிவாக்கம் ஆறுமுகம் (21), மேற்கு தாம்பரம் தினேஷ்குமார் (21) ஆகியோர் தாம்பரம் கோர்ட்டில் சரணடைந்தனர். இந்த நிலையில் நேற்று இந்த வழக்கில் 3 பேர் செங்கல்பட்டு கோர்ட்டில் சரணடைவதற்கு செல்லும் தகவல் தனி படை போலீசாருக்கு கிடைத்தது. தனி கோர்ட்டு வாசலில் வைத்து தனிப்படை போலீசார் 3 பேரையும் கைது செய்தனர்.

    3 பேரும் தாம்பரம் பகுதியை சேர்ந்த 15 மற்றும் 17 வயதுடைய சிறுவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. அவர்களிடம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    • ஓசூர் ரெயில் நிலைய சாலையில் உள்ள ஒரு டீக்கடையில் டீ குடித்த போது மர்ம நபர்களால் வெட்டி கொலை செய்யப்பட்டார்.
    • அந்த கொலை தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

    ஓசூர்,

    கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் நகர ஸ்ரீ ராம் சேனா செயலாளராக இருந்தவர் மோகன்பாபு (வயது25). இவர் கடந்த ஆண்டு ஜனவரி 1-ந் தேதி வெட்டிக்கொலை செய்யப்பட்டார்.

    இந்த வழக்கில் ஓசூர் சொப்பட்டியை சேர்ந்த ரவுடி திலக் (24) என்பவரை போலீசார் கைது செய்தனர். ஜாமீனில் வந்த திலக் கடந்த மே மாதம் 12-ந் தேதி ஓசூர் ரெயில் நிலைய சாலையில் உள்ள ஒரு டீக்கடையில் டீ குடித்த போது மர்ம நபர்களால் வெட்டி கொலை செய்யப்பட்டார்.

    அந்த கொலை தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அப்போது மோகன்பாபு கொலைக்கு பழிக்கு பழி வாங்கும் விதமாக அவரது தந்தை திம்மராயப்பா (54), மத்திகிரி ரவுடி சசிக்குமார் (24) என்பவர் உதவியுடன் திலக்கை கொலை செய்தது தெரிய வந்தது.

    அந்த கொலையில் திம்மராயப்பா, சொப்பட்டி சிவக்குமார் (23), தின்னூர் வெங்கடேஷ் (25) ஆகியோரை போலீசார் கைது செய்தனர். சசிக்குமார் சங்ககிரி கோர்ட்டில் சரண் அடைந்தார். பின்னர் அனைவரும் சேலம் சிறையில் அடைக்கப்பட்டனர்.

    இந்த வழக்கில் தொடர்புடைய ரவுடி சசிக்குமார் தொடர்ந்து குற்ற செயலில் ஈடுபட்டு வந்ததால் அவரை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க போலீஸ் சூப்பிரண்டு சரோஜ்குமார் தாக்கூர் கலெக்டருக்கு பரிந்துரை செய்தார்.

    இதையடுத்து, ரவுடி சசிக்குமாரை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க கலெக்டர் சரயு உத்தரவிட்டார். இந்த உத்தரவு நகல், சேலம் மத்திய சிறையில் உள்ள சசிக்குமாரிடம் வழங்கப்பட்டது, இதையடுத்து ரவுடி சசிக்குமார் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.

    • வீட்டில் தனியாக இருந்த சஞ்சய் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
    • போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

    கும்மிடிப்பூண்டி:

    சென்னை வியாசர்பாடி கக்கன்ஜி காலனியை சேர்ந்தவர் சஞ்சய் (வயது 19). இவர் மீது சென்னை செம்பியம் போலீஸ் நிலையத்தில் கொலை வழக்கு உள்ள நிலையில் அண்மையில் இவர் ஜாமினில் வெளியே வந்தார். கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு சஞ்சய் கும்மிடிப்பூண்டி அடுத்த எளாவூர் பகுதியில் தனது பெற்றோர்களுடன் வசித்து வந்தார். அங்கிருந்தவாறு அவர் அந்த பகுதியில் வேலை தேடி வந்ததாக கூறப்படுகிறது.

    இந்நிலையில் நேற்று முன்தினம் பெற்றோர்கள் வெளியே சென்ற நிலையில் வீட்டில் தனியாக இருந்த சஞ்சய் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். நீண்ட நேரமாகியும் கதவு திறக்கப்படாததால் சந்தேகம் அடைந்த அக்கம்பக்கத்தினர் வீட்டின் ஜன்னல் வழியாக பார்த்தனர். அப்போது சஞ்சய் தூக்கில் தொங்கியதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

    இதுகுறித்து போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்ட நிலையில் சம்பவ இடத்திற்கு விரைந்த ஆரம்பாக்கம் போலீசார், கதவை உடைத்து உள்ளே சென்று சஞ்சையின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பொன்னேரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    பின்னர் இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். முதற்கட்ட விசாரணையில் அதில் கொலை வழக்கில் ஜாமினில் வெளியே வந்த நிலையில் சஞ்சய் மன உளைச்சலில் இருந்து வந்ததாகவும், அதன் காரணமாக தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என தெரிய வந்தது.

    • கொலையாளிகளை தனிப்படை அமைத்து தேடி வந்தனர்.
    • கடலூரில் பதுங்கியிருந்த அருண்குமாரை கைது செய்தனர்.

    வெள்ளகோவில்:

    வெள்ளகோவில் அருகே உள்ள கே.வி பழனிச்சாமி நகரில் கடந்த 18 ந் தேதியன்று நாமக்கல் மாவட்டம் வேலூர் பகுதியை சேர்ந்த பெயிண்டர் மோகன்ராஜ் (வயது 32) என்பவர் கொலை செய்யப்பட்டு கிடந்தார். இது குறித்து வெள்ளகோவில் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராமதேவி கொலை வழக்கு பதிவு செய்து கொலையாளிகளை தனிப்படை அமைத்து தேடி வந்தனர்.

    இந்நிலையில் இந்த கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட கரூர் பகுதியை சேர்ந்த அருண்குமார் (27) என்பவர் கடலூரில் பதுங்கி இருப்பதாக கிடைத்த தகவலின் பேரில் தனிப்படை போலீசார் கடலூர் விரைந்தனர். அங்கு பதுங்கியிருந்த அருண்குமாரை கைது செய்த போலீசார் காங்கேயம் கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். நீதிபதி 15 நாள் சிறையில் அடைக்க உத்தரவிட்டார். நீதிபதி உத்தரவின் பேரில் அருண்குமார் திருப்பூர் மாவட்ட சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.மேலும் இந்த வழக்கில் தொடர்புடைய ஹக்கீம் என்பவரை போலீசார் தேடி வருகின்றனர்.

    • தம்பதியை வெட்டி கொலை செய்த வழக்கில் சகோதரர்களுக்கு இரட்டை ஆயுள் தண்டனை வழங்கப்பட்டது
    • தலா ரூ.22,000 அபராதம் விதித்தும் தீர்ப்பளிக்கபட்டது

    கரூர்,

    கரூரை அடுத்த ராயனூர் தில்லைநகரை சேர்ந்தவர் ரெங்கநாதன் (வயது 37), ஏசி மெக்கானிக். இவர் மனைவி தீபிகா (29). இவர்கள் மகள் அக்சயா (4). ரெங்கநாதன் குடும்பத்துடன் மணவாடி அய்யம்பாளையத்தில் வசித்து வந்தார். ரெங்கநாதனின் சித்தி மகன்கள் பார்த்திபன் (வயது 26), கவுதம் (19), பிரவீண் (25). இவர்களுக்கு இடையே நிலத்தகராறு இருந்து வந்தது. அய்யம்பாளையத்தில் உள்ள ரெங்கநாதன் வீட்டுக்கு கடந்த 2020ம் ஆண்டு மே 11ம் தேதி இரவு பார்த்திபன், கவுதம், பிரவீண் ஆகிய 3 பேரும் சென்றுள்ளனர்.ரெங்கநாதனை பார்த்திபன் அரிவாளால் வெட்டியுள்ளார். இதில் படுகாயமடைந்த ரெங்கநாதன் தலை மீது கவுதம் காஸ் சிலிண்டரை தூக்கி போட்டதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

    சத்தம் கேட்டு வீட்டுக்குள் வந்த தீபிகாவை பிரவீண் அரிவாளால் வெட்டியதில் அவரும் சம்பவ இடத்திலேய உயிரிழந்தார். இதையடுத்து 3 பேரும் அங்கிருந்து தப்பி சென்றனர். இதுகுறித்து தகவலறிந்த வெள்ளியணை போலீசார் வழக்கு பதிவு செய்து பார்த்திபன், கவுதம், பிரவீன் ஆகிய 3 பேரை கைது செய்தனர். சிறையில் இருந்து பிணையில் வெளியே வந்த பிரவீண் தலைமறைவானார். கரூர் மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வந்த இவ்வழக்கில் கரூர் மாவட்ட அமர்வு நீதிபதி சண்முகசுந்தரம் வழங்கிய தீர்ப்பில், பார்த்திபன், கவுதம் ஆகிய இருவருக்கு தலா இரட்டை ஆயுள் தண்டனைகள் விதித்து அவற்றை ஏக காலத்தில் அனுபவிக்கவும், தலா ரூ.22,000 அபராதம் விதித்தும் தீர்ப்பளித்தார்.

    • சதீஷ், பரங்கிமலை ரெயில் நிலையத்திற்கு வந்து கொண்டிருந்த மின்சார ரெயிலில் சத்யாவை தள்ளிவிட்டுள்ளார்.
    • சதீஷ் மீதான குண்டர் சட்டத்தை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்துள்ளது.

    சென்னை:

    சென்னை கிண்டியை அடுத்த ஆதம்பாக்கம் பகுதியைச் சேர்ந்த சதீஷ்(23) என்பவர் அதே பகுதியைச் சேர்ந்த 2ஆம் ஆண்டு கல்லூரி மாணவி சத்யா(20) என்பவரை ஒருதலையாக காதலித்து வந்துள்ளார். இவர்கள் இருவரும் பரங்கிமலை ரெயில் நிலையத்தில் நின்று பேசிக்கொண்டு இருந்த போது இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டு சண்டை நடந்துள்ளது. இதனால் ஆத்திரமடைந்த சதீஷ், பரங்கிமலை ரெயில் நிலையத்திற்கு வந்து கொண்டிருந்த மின்சார ரெயிலில் சத்யாவை தள்ளிவிட்டுள்ளார். இதில் ரெயிலில் சிக்கி சத்யா உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

    இச்சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இக்கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சதீஷ் சிறையில் அடைக்கப்பட்டார்.

    இந்நிலையில் சதீஷ் மீதான குண்டர் சட்டத்தை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்துள்ளது.

    கைது செய்தது தொடர்பான குறிப்பாணையில் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் உள்ள தகவலில் முரண்பாடு இருப்பதன் காரணமாக குண்டர் சட்டத்தை ரத்து செய்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

    • பணத்திற்கான வட்டித் தொகை உயர்ந்ததால் அவர்களால் பணத்தை கட்ட முடிய வில்லை.
    • பணம் கொடுக்காவிட்டால் கொலை செய்து விடுவேன் என மிரட்டியுள்ளார்.

    தேன்கனிக்கோட்டை,

    கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் சாந்தி நகரைச் சேர்ந்தவர் கேசவன் (வயது51), ரியல் எஸ்டேட் அதிபரான இவர், செங்கல் சூளையும் நடத்தி வந்தார்.

    கடந்த மாதம் 19-ம் தேதி மதியம், தேன்கனிக்கோட்டை அருகே உள்ள கே.மல்ல சந்திரம் கிராமத்தில், மோகன் என்பவரிடம் பணம் வாங்க டூவீலரில் சென்ற போது, சொகுசு காரில் வந்த 8 பேர் கும்பல், அவரை வழிமறித்து 8 பேர் சரமாரியாக வெட்டிக் கொலை செய்தனர்.

    இந்த கொலை தொடர்பாக, தேன்கனிக்கோட்டை டி.எஸ்.பி. முரளி, தளி இன்ஸ்பெக்டர் நாகராஜ் ஆகியோர் விசாரணை நடத்தி, கொலையாளிகளை தேடி வந்தனர்.

    கொலையான கேசவனிடம், பஜ்ஜேபள்ளி கிராமத்தைச் சேர்ந்த நாகராஜ் (35), என்.கொத்தூரை சேர்ந்த மோகன்குமார்(29) ஆகியோர், வட்டிக்கு வாங்கிய பணத்தை திரும்ப கொடுக்காமல் இருந்ததால், பணம் கேட்டு தகராறு செய்த கேசவனை கூட்டாளிகளுடன் சேர்ந்து வெட்டி கொலை செய்தது தெரியவந்தது.

    இதனிடையே, கடந்த 21-ம் தேதி பஜ்ஜேப்பள்ளியை சேர்ந்த சம்பங்கி ராமைய்யா மகன் நாகராஜ் (35), சம்பங்கியப்பா மகன் அபிநத்தா (29), என். கொத்தூர் கிராமத்தைச் சேர்ந்த ராமசந்திரப்பா மகன் மோகன்குமார் (29), பண்டேஷ்வரம் கிராமத்தைச் சேர்ந்த நாராயணப்பா மகன் ஜலபதி (31), அலேநத்தம் கிராமத்தைச் சேர்ந்த வெங்கடசாமி மகன்சிவக்குமார் (24), வெங்கடேசப்பா மகன் ஸ்ரீதர் (23), முனியப்பா மகன் முனிராஜ் (33), கர்நாடக மாநிலம் சிக்கபல்லாபூர் செட்டிப்பள்ளியைச் நேர்ந்த மஞ்சுநாத்ரெட்டி (32) ஆகிய 8 பேர் வேலூர் குற்றவியல் நீதிமன்றத்தில் சரணடைந்தனர்.

    அவர்களை காவலில் எடுத்து விசாரிக்க இன்ஸ்பெக்டர் நாகராஜ், கடந்த 1-ந் தேதி தேன்கனிக்கோட்டை நீதிமன்றத்தில் அனுமதி பெற்றார்.

    விசாரணையில், அவர்கள் போலீசாரிடம் அளித்த வாக்குமூலத்தில் கூறியதாவது:-

    பஜ்ஜேப்பள்ளியை சேர்ந்த நாகராஜ், என்.கொத்தூர் கிராமத்தைச் சேர்ந்த மோகன்குமார் ஆகியோர் சேர்ந்து, கேசவனிடம் ரூ.10 லட்சம் வட்டிக்கு பணம் வாங்கியுள்ளனர்.

    பணத்திற்கான வட்டித் தொகை உயர்ந்ததால் அவர்களால் பணத்தை கட்ட முடியவில்லை. இந்நிலையில், கேசவன் வட்டி பணம் கேட்டு தொந்தரவு செய்து வந்துள்ளார். மேலும், பணம் கொடுக்காவிட்டால் கொலை செய்து விடுவேன் என மிரட்டியுள்ளார்.

    அதனால் இருவரும் சேர்ந்து, கேசவனை தீர்த்துக் கட்ட முடிவு செய்து, பணம் கொடுப்பதாக கூறி கே.மல்லசந்திரம் கிராமத்திற்கு வரவழைத்து, 8 பேர் சேர்ந்து வழிமறித்து வெட்டி கொலை செய்தனர்.

    இவ்வாறு அவர்கள் வாக்குமூலம் அளித்துள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.

    இதையடுத்து, கொலைக்கு பயன்படுத்திய கார், ஆயுதங்களை போலீசார் பறிமுதல் செய்தனர். பின்னர், 8 பேரையும் தேன்கனிக்கோட்டை நீதிமன்றத்தில் மாஜிஸ்திரேட் தினேஷ் முன்பு ஆஜர்படுத்தி, அவரது உத்தரவின் பேரில், 17-ந் தேதிவரை தருமபுரி கிளை சிறையில் அடைத்தனர்.

    • கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 15-ந்தேதி அஞ்சு அசோக், தனது குழந்தைகளுடன் வீட்டில் உணர்வற்ற நிலையில் கிடந்தார்.
    • ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றபோது 3 பேரும் இறந்துவிட்டது தெரியவந்தது.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலம் கண்ணூர் மாவட்டத்தை சேர்ந்தவர் சஜூ சவுலவன் (வயது 52). இவரது மனைவி அஞ்சு அசோக். கோட்டயம் மாவட்டம் வைக்கம் பகுதியை சேர்ந்த இவர் இங்கிலாந்து நாட்டில் உள்ள ஆஸ்பத்திரியில் நர்சாக வேலை பார்த்து வந்தார்.

    இதனால் கணவர் மற்றும் 2 குழந்தைகளுடன் அங்குள்ள கெட்டரிங் பகுதியில் வசித்து வந்தார். கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 15-ந்தேதி அஞ்சு அசோக், தனது குழந்தைகளுடன் வீட்டில் உணர்வற்ற நிலையில் கிடந்தார். அவர்களை ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றபோது 3 பேரும் இறந்துவிட்டது தெரியவந்தது.

    அவர்கள் கழுத்தை நெரித்து கொலை செய்யப்பட்டு இருப்பது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது. தொடர்ந்து நடைபெற்ற விசாரணையில், சஜூ சவுலவன் தான் மனைவி மற்றும் குழந்தைகளை கொலை செய்திருப்பது உறுதியானது. இதனைத்தொடர்ந்து அவர் மீது வழக்கு தொடரப்பட்டது.

    இந்த வழக்கு இங்கிலாந்தின் நார்த்தாம்டன் கிரவுன் கோர்ட்டில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கில் சஜூ சவுலவனுக்கு 40 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து கோர்ட்டு தீர்ப்பளித்து உள்ளது.

    • காளியம்மாள் (வயது 47). இவர் முதல் கணவரை விட்டு பிரிந்து மேட்டூரை சேர்ந்த ரவுடி ரகுவை காதலித்து 2-ம் திருமணம் செய்துகொண்டார்.
    • உடலில் வெட்டு காயங்களுடன் கொலை செய்யப்பட்டு கிடந்தார். ஆட்டையாம்பட்டி போலீசார் விசாரித்தனர்.

    சேலம்:

    சேலம் மாவட்டம் சீரகா பாடி சமத்துவபுரத்தை சேர்ந்தவர் காளியம்மாள் (வயது 47). இவர் முதல் கணவரை விட்டு பிரிந்து மேட்டூரை சேர்ந்த ரவுடி ரகுவை காதலித்து 2-ம் திரு மணம் செய்துகொண்டார். அவர் கடந்த, 20-ந் தேதி உடலில் வெட்டு காயங்களு டன் கொலை செய்யப்பட்டு கிடந்தார். ஆட்டையாம்பட்டி போலீசார் விசாரித்தனர். இது குறித்து போலீசார் கூறியதாவது:

    காளியம்மாள், ரகு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டது. சம்பவத்துக்கு முதல்நாள் இரவு ரகு, அவரது நண்பர்களுடன் வீட்டுக்கு வந்து சென்றார். இதனால், காளியம்மாள் கொலை தொடர்பாக தனிப்படை போலீசார், ரகுவை தேடி வந்த நிலை யில் நேற்றுமுன்தினம் ஈரோடு மாவட்டம் கோபி செட்டிபாளையம் ஜே.எம்., 2 நீதிமன்றத்தில் அவர் சரணடைந்தார். அவரை, சேலம் நீதிமன்றத்தில் நாளை ஒப்படைப்பார்.

    பின் அவரை காவலில் எடுத்து விசாரிக்க முடிவு செய்து அதற்கான நடவ டிக்கைகளை எடுத்து வருகி றோம். இவ்வாறு அவர்கள் கூறினர்.

    • தனிப்படை போலீசார் மாயமான செந்தில்குமாரின் செல்போன் எண்ணுக்கு வந்த அழைப்புகளை ஆய்வு செய்தனர்.
    • தொழில் ரீதியாக 2 பேருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது.

    விருதுநகர்:

    மதுரையை சேர்ந்தவர் பிரபல ரவுடி வரிச்சியூர் செல்வம். நடமாடும் நகைக்கடை போன்று அதிக நகைகள் அணிந்து வலம் வரும் இவரிடம், விருதுநகர் மாவட்டம் அல்லம்பட்டி வீரராமன் தெருவை சேர்ந்த செந்தில்குமார் (வயது 38) என்பவர் கூட்டாளியாக இருந்த வந்தார்.

    கடந்த சில மாதங்களுக்கு முன்பு வரிச்சியூர் செல்வத்துடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக செந்தில்குமார் அவரை பிரிந்து சென்றார். சில ஆண்டுகளுக்கு முன்பு கருப்பாயூரணியில் நடந்த ஊராட்சி தலைவர் கொலை சம்பவம் தொடர்பாக செந்தில்குமாரை போலீசார் வழக்கில் சேர்த்திருந்தனர்.

    ஆனால் அவர் விசாரணையின்போது ஆஜராகவில்லை. இதையடுத்து எதிர்தரப்பினர் செந்தில்குமாரை கண்டுபிடித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என மதுரை ஐகோர்ட்டில் முறையிட்டனர். இதனை விசாரித்த நீதிபதிகள், செந்தில்குமாரை கண்டு பிடித்து ஆஜர்படுத்துமாறு உத்தரவிட்டனர்.

    அதன்படி தென்மண்டல ஐ.ஜி. அஸ்ரா கார்க் ஆலோசனையின்பேரில் விருதுநகர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சீனிவாசபெருமாள் உத்தரவின்பேரில் அருப்புக்கோட்டை உதவி போலீஸ் சூப்பிரண்டு கருண் காரட், இன்ஸ்பெக்டர் பாலமுருகன் ஆகியோர் அடங்கிய தனிப்படை அமைக்கப்பட்டது.

    தனிப்படை போலீசார் மாயமான செந்தில்குமாரின் செல்போன் எண்ணுக்கு வந்த அழைப்புகளை ஆய்வு செய்தனர். அப்போது அவர் வரிச்சியூர் செல்வத்துடன் அடிக்கடி பேசியிருந்தது தெரியவந்தது. இதையடுத்து வரிச்சியூர் செல்வத்தை பிடித்து போலீசார் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தினர். இதில் செந்தில்குமார் கொலை செய்யப்பட்டது தெரிய வந்தது. இதையடுத்து வரிச்சியூர் செல்வத்தை போலீசார் கைது செய்தனர்.

    செந்தில்குமார் வரிச்சியூர் செல்வத்தை விட்டு பிரிந்து சென்ற நிலையில், கருப்பாயூரணி ஊராட்சி தலைவர் கொலை வழக்கில் அவரது பெயரை போலீசார் சேர்த்திருந்தனர். தொழில் ரீதியாக 2 பேருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. இதனால் வரிச்சியூர் செல்வம், செந்தில்குமாரை கொலை செய்ய திட்டமிட்டார்.

    அதன்படி சென்னையில் இருந்த அவரை கூட்டாளிகளுடன் சேர்ந்து துப்பாக்கியால் சுட்டு கொன்று விட்டு உடலை துண்டு துண்டாக வெட்டி உள்ளார். பின்னர் அதனை பார்சல் கட்டி நெல்லை மாவட்டம் தாமிரபரணி ஆற்றில் வீசி உள்ளனர்.

    மேற்கண்ட தகவல் போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

    இதற்கிடையில் கைது செய்யப்பட்ட வரிச்சியூர் செல்வத்தை சாத்தூர் கோர்ட்டில் நேற்று இரவு ஆஜர்படுத்தி மதுரை மத்திய சிறையில் அடைத்தனர். கொலையுண்ட செந்தில்குமாரின் கார், செல்போன் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்திருப்பது குறிப்பிடத்தக்கது.

    • எரிக் ரிச்சின்ஸ் இறப்பிற்கு காரணம் பெண்டனில் எனப்படும் சக்திவாய்ந்த வலிநிவாரணி மருந்துதான் காரணம் என தெரியவந்தது.
    • கணவருக்கு ஓட்கா மதுபானம் அளித்ததாகவும், அதன் பிறகு அவர் மூர்ச்சையானதாகவும் மனைவி கோரி ரிச்சின்ஸ் கூறியிருந்தார்.

    அமெரிக்காவில் உள்ள உட்டா மாநிலத்தில், சம்மிட் கவுண்டியில் வசித்தவர், கோரி டார்டன் ரிச்சின்ஸ் (33). இவரது கணவர் எரிக் ரிச்சின்ஸ். இவர்களுக்கு மூன்று குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில், கடந்த ஆண்டு மார்ச் மாதம் எரிக் ரிச்சின்ஸ் திடீரென காலமானார்.

    இதனையடுத்து சில நாட்கள் கழித்து, கோரி ரிச்சின்ஸ் தனது கணவரின் மரணத்திற்கு பிறகு தாம் அனுபவித்து வந்த சோகத்தை பற்றி குழந்தைகளுக்கு, "என்னோடு இருக்கிறீர்களா?" (Are You With Me?), என்ற தலைப்பில் ஒரு புத்தகம் எழுதி பிரபலமானார். தனக்கும், தன் குழந்தைகளுக்கும் நிம்மதி கிடைக்க வேண்டியே இந்த புத்தகத்தை தாம் எழுதியிருப்பதாக பேட்டி அளித்திருந்தார். இவருக்கு பலரும் தமது அனுதாபங்களை தெரிவித்திருந்தனர்.

    இந்நிலையில், இந்த வழக்கில் திடுக்கிடும் திருப்பமாக, எரிக் இறப்பிற்கு காரணம் அதிக அளவு அவர் உடலில் காணப்பட்ட, 'ஃபெண்டனில்' (Fentanyl) எனப்படும் சக்திவாய்ந்த வலிநிவாரணி மருந்துதான் என்றும், அதை அளவுக்கதிகமாக அவருக்கு கொடுத்தது அவர் மனைவி, கோரி ரிச்சின்ஸ் தான் என்றும் காவல்துறை ஆதாரத்துடன் கண்டுபிடித்து அவரை கைது செய்திருக்கிறது.

    செய்திகளின் அடிப்படையில், மூன்று குழந்தைகளின் தாய் கோரி, தனது கணவர் எரிக் ரிச்சின்ஸுக்கு, மார்ச் 2022ல் ஃபெண்டனில் என்ற வலி நிவாரணி மருந்தை அளவுக்கதிகமாக கொடுத்ததாகக் குற்றம் சாட்டப்பட்டார். விசாரணையில், அவர் கூகுள் தளத்தில் குற்றச்செயல் தொடர்பான அதிர்ச்சிகரமான தகவல்களை தேடியது தெரியவந்துள்ளது.

    அதாவது, உட்டாவில் உள்ள நீண்ட கால சிறைதண்டனை கைதிகளுக்கான சிறைச்சாலைகள் மற்றும் அமெரிக்காவில் உள்ள பணக்காரர்களுக்கான சொகுசு சிறைச்சாலைகள் பற்றிய தகவல்களை அவர் இணையத்தில் தேடியிருக்கிறார்.

    மேலும் தான் தேடும் செய்திகளை நீக்கிவிட்டாலும், நீக்கப்பட்ட செய்திகளை புலனாய்வாளர்களால் பார்க்க முடியுமா? ஆயுள் காப்பீட்டு நிறுவனங்கள் இழப்பீட்டு உரிமை கோருபவர்களுக்கு பணம் செலுத்த எவ்வளவு நேரம் எடுக்கும்? உண்மை கண்டறியும் சோதனைக்கு போலீசார் ஒருவரை கட்டாயப்படுத்த முடியுமா? மற்றும் இறப்பு சான்றிதழில் மரணத்திற்கான காரணத்தை மாற்ற முடியுமா? என்றெல்லாம் அவர் வலைதளங்களில் தேடியுள்ளார்.

    விசாரணையின்போது வெளியான இந்த தகவல்களால், அவரால் சமூகத்திற்கு கணிசமான ஆபத்து என நீதிபதி குறிப்பிட்டார். அத்துடன், அவரை சிறையில் அடைக்குமாறு உத்தரவிட்டார்.

    "புலனாய்வு விசாரணையின் கீழ் இருப்பதற்கான அறிகுறிகள்" மற்றும் "இறப்புக்கான காரணத்துடன் நிலுவையில் உள்ள மரணச் சான்றிதழுக்கான இழப்பீடு வழங்குவதில் தாமதம்" என்று தலைப்பிடப்பட்ட கட்டுரைகளை கோரி படித்ததாக ஊடக செய்தி தெரிவித்துள்ளது.

    இதேபோல் "நலோக்சோன் ஹெராயின் போன்றதா?", "இயற்கைக்கு மாறான மரணம் என்று கருதப்படுவது என்ன?" மற்றும் "கோரி ரிச்சின்ஸ் கமாஸின் நிகர மதிப்பு" ஆகிய தகவல்களை தேடியதாகவும் அச்செய்தி தெரிவிக்கிறது.

    இதுபற்றி அவரது தரப்பு வழக்கறிஞர் கிளேட்டன் சிம்ஸ் கூறும்போது, ஆதாரங்கள் எவ்வாறு சேகரிக்கப்படுகின்றன என்பதைப் பார்ப்பதற்கு வெறுமனே தனது வழக்கு குறித்து ஆராய்ந்ததாகவும், "அவர் குற்றவாளி என சுட்டிக்காட்டும் எதுவும் அங்கு இல்லை" என்றும் தெரிவித்தார்.

    எரிக் ரிச்சின்ஸின் சகோதரி ஏமி ரிச்சின்ஸ் அளித்த வாக்குமூலத்தில், "எரிக் பயங்கரமான சூழ்நிலையில் இறந்தார். அவர் என்னவெல்லாம் சகித்து கொண்டிருக்கிறார் என்பதை நினைத்து நான் வேதனைப்படுகிறேன்" என கூறியிருக்கிறார். ஒரு புறம் எனது சகோதரனின் இறப்பிலிருந்து ஆதாயம் தேடிக் கொண்டு, மறுபுறம் துக்கத்தில் இருக்கும் விதவையாகவும், பாதிக்கப்பட்டவராகவும் கோரி தன்னை காட்டிக்கொண்டிருக்கிறார் எனவும் ஏமி ரிச்சின்ஸ் கூறியுள்ளார்.

    மார்ச் 2022ல் ஒருநாள் நள்ளிரவில் கோரி ரிச்சின்ஸ், காவல்துறையை தொடர்புகொண்டு தனது கணவர் அசைவற்று கிடப்பதாகவும், உடல் குளிர்ச்சியாக இருப்பதாகவும் தெரிவித்திருக்கிறார். தனது கணவருக்கு ஓட்கா பான கலவை அளித்ததாகவும், அதன் பிறகு சில மணி நேரத்தில் அவர் மூர்ச்சையாகி கிடந்ததாகவும் அதிகாரிகளிடம் கோரி ரிச்சின்ஸ் கூறியிருந்தார்.

    ஆனால், எரிக் ரிச்சின்ஸ் உடலை பரிசோதித்த மருத்துவர், அவர் ஃபெண்டனில் எனப்படும் மருந்தை வழக்கமாக உட்கொள்வதைவிட ஆபத்தை விளைவிக்கும் வகையில் 5 மடங்கு அதிகமாக உட்கொண்டதால் இறந்திருப்பதாக தெரிவித்தார்.

    நீதிமன்றத்தில் தாக்கல் தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையின்படி, டிசம்பர் 2021 மற்றும் பிப்ரவரி 2022க்கு இடைப்பட்ட காலத்தில், எரிக் ரிச்சின்ஸ், போதைப்பொருள் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட ஒரு நபருக்கு ஒரு குறுஞ்செய்தி அனுப்பியுள்ளார். அதில், முதுகு வலிக்காக ஒரு முதலீட்டாளருக்கு பரிந்துரைக்கப்பட்ட வலி மருந்துகள் தேவைப்படுவதால், அதன் பெயரை அனுப்புமாறு அதில் குறிப்பிட்டுள்ளார்.

    இந்த காலத்தில் கோரி ஹைட்ரோகோடோன் மாத்திரைகளை பெற்றுள்ளார். அதற்கு பிறகு அதை விட வீரியமிக்க ஒரு மருந்தை கேட்டுள்ளார். மூன்று நாட்களுக்குப் பிறகு அந்த மருந்துகளைப் பெற்றுள்ளார். பிறகு கணவன்-மனைவி இருவரும் காதலர் தின விருந்து சாப்பிட்டுள்ளனர். அதற்கு பிறகு எரிக் ரிச்சின்ஸ் நோய்வாய்ப்பட்டார். இரண்டு வாரங்களுக்குப் பிறகு, கோரி ரிச்சின்ஸ் மேலும் அதிக ஃபெண்டனிலை பெற்றிருக்கிறார்.

    இந்த வழக்கு அமெரிக்காவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    • பண்ருட்டியில் 2 ரவுடிகள் கைது செய்யப்பட்டனர்.
    • பழிவாங்கும் நோக்கத்துடன் ரவுடிகள்சுற்றி திரிவதாக பண்ருட்டி போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

    கடலூர்:

    கடலூர் மாவட்டம் பண்ருட்டி அய்யனார் கோவில் தெருவை சேர்ந்தவர் வசந்த் என்கிற வசந்தகுமார்(18),சுமன் (24) கொக்குபாளையம் குணா(22) இவர்கள் மூவரும் கொலை வழக்கு ஒன்றில்கைதாகிஜா மீனில் ்வெளிவந்துள்ளனர். நேற்று முன்தினம் ரவுடி வசந்த் என்ற வசந்தகுமாரை கருணா கத்தியால் குத்தினார்.

    இந்த சம்பவத்துக்கு பழிவாங்கும் நோக்கத்துடன் ரவுடிகள்சுற்றி திரிவதாகபண்ருட்டி போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனை தொடர்ந்து பண்ருட்டி டி.எஸ்.பி. சபியுல்லா உத்தரவின் பேரில் பண்ருட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் கண்ணன், சப் இன்ஸ்பெக்டர் தங்கவேலு , தனிப்படை சப் இன்ஸ்பெக்டர் ராமச்சந்திரன் மற்றும் போலீசார் ரவுடிகள் சுமன் ,குணா இருவரையும் கைது செய்து பண்ருட்டி கோர்ட்டில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்

    ×